| உயிர்மை பனுவலில் கடந்த செப்டம்பர் மாத பனுவலிருந்து 'போரும் வாழ்வும்' கட்டுரை வெளிவந்து கொண்டிருக்கிறது | தொடர்புகளுக்கு deebachelvan@gmail.com

Saturday, December 26, 2009

மரணங்களின் நிலம்




போரும் வாழ்வும் 04

ஏ-9 வீதியில் இராணுவ வாகனங்களில் செல்லும் இந்தியப் படைகள், கிராமம் எங்கும் நடமாடிக் கொண்டிருப்பதும் அதிகாலை விடியும்போது கைது செய்யப்பட்டவர்கள் வரிசையில் அழைத்துச் செல்லபடுவதும் துப்பாக்கியுடன் வீட்டுக்கு களவாக வந்துபோகும் ஒன்றுவிட்ட அண்ணாவும் ரெலிகப்படர் வந்து தாக்கிக்கொண்டிருந்த கிளிநொச்சி நகரமும் மிகச்சிறிய வயது ஞாபகங்களாக இருக்கின்றன. போருக்குள் வறுமையும் அப்பவால் கைவிடப்பட்டு தனிமையில் இருந்து உறவுகளால் ஒதுக்கி விடப்பட்ட அம்மாவின் துயரமும் மிகவும் நேசத்திற்குரிய தங்கச்சியை வளர்க்கும் நெருக்கடியும் விளையாட்டுத் தனத்துடன் இருந்து கடைசியில் கனவிற்காக இழந்த அண்ணாவும் கிளிநொச்சியும் அகதியாய் அலைந்த பிரதேசங்களும் என்று வாழ்வு கழிந்து கொண்டிக்கிறது.

மரணங்களின் நிலம்

அண்ணா தனது ஐந்து வருடப்பணியை முடித்துக்கொண்ட நிலையில் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தான். எங்கள் வீட்டு நிலவரத்தாலேயே அனுப்பட்டாதாக காரணம் கூறப்பட்டது. எங்களுக்கு அண்ணா திரும்பி வந்த பொழுது ஏற்பட்டிருந்த மகிழ்ச்சியையும் ஆறுதலையும் என்னால் இங்கு எழுதிவட முடியவில்லை. தனது போராளிகளை பிரிந்து வருவதற்கு அவன் மிக கஷ்டப்பட்டிருந்தான். அவர்களின் கனவு மிகுந்த கவிதைகளையும் சொற்களையும் வரும்பொழுது கொண்டு வந்தான். அப்பொழுது நான் பதினோரவது வகுப்பில் படித்துக்கொண்டிருந்தேன். சாதாரணதரப் பரீட்சை எழுதி உயர்தரத்திற்கு செல்லவேண்டியிருந்தது. வீட்டில் நிலவிய கடுமையான வறுமையால் நான் பாடசாலைகளுக்கு ஒழுங்காக செல்லுவதில்லை. எப்படியான வறுமையிலும் அம்மா என்னைப் படிக்க வைக்க வேண்டும் என்ற உறுதியுடன் இருந்தார். நான் படித்து நல்ல நிலைக்கு வரவேண்டும் என்று அண்ணாவும் எப்பொழுதும் சொல்லிக் கொண்டிருப்பான். நான் எப்பாவது ஒரு நாள்தான் பாடசாலை சென்று கொண்;டிருந்தேன். எனது கல்வி அடைவு மட்டம் மிக மோசமாக இருந்தது. எப்படியும் தங்கச்சியையும் படிக்க வைக்க வேண்டும் என்று நான் நினைத்திருந்தேன். எனது மாணவர்கள் பாடசாலை செல்ல நான் கிணறு வெட்டுவதற்கும் வயல் வரம்புகளை துப்புரவாக்குவதற்கும் சென்று கொண்டிருந்தேன்.

எனது அண்ணா முன்னாள் போராளி ஒருவரை திருமணம் செய்து கொண்டான். அண்ணாவின் மனைவி விடுதலைப்புலிகளின் சிறுத்தை என்ற பிரிவில் இணைந்து ஆறு வருடங்கள் பணியாற்றியிருந்தார். இயத்தில் இருந்து விலகிய பிறகும் அண்ணா அடிக்கடி புதுக்குடியிருப்பு சென்று திரும்பிக்கொண்டிருப்பது அம்மாவுக்கு அச்சத்தை ஏறபடுத்தியது. அவன் திருமணம் செய்து கொள்வதன் மூலம் அவனை பாதுகாக்கலாம் என்று அம்மா நம்பிக்கொண்டார்.

ஆனையிறவுக்கான தாக்குதல்கள் அப்பொழுது தொடங்கியிருந்தன. ஆனையிறவு இலங்கை இராணுவத்தின் மிகப்பெரிய கோட்டையக இருந்தது. முழு வன்னி நிலத்திற்கும் அச்சுறுத்தல் தந்துகொண்டிருந்தது. 1989 ஆம் ஆண்டு என்று நினைக்கிறேன் சிங்கள இராணுவமும் இந்திய இராணுவமும் ஆனையிறவில் நிலைகொண்டிருந்த பொழுது அந்தப் பகுதியால் பயணம் செய்ய ஞபாகம் எனக்கு இருக்கிறது. உப்பு விளைகிற அந்த பரப்பு எப்பொழுதும் இராணுவ மயமாகவே இருந்தது. ஈழப்போராட்ட காலங்களில் உக்கிரமாக போர் நடக்கிற பொழுது ஆனையிறவு கடுமையான களமாக உணப்பட்டது. எனக்கு ஐந்தாறு வயதுகளில் ஆனையிறவு கிளிநொச்சி பரந்தன் என்பன சமர்கள் இடம்பெறும் களமாகவும் ரெலிகப்படர்கள் வந்து தாக்குதல் நடத்துகிற இடமாகவும் இருந்தன.

தமழீழ விடுதலைப் புலிகள் ஆனையிறவை கைப்பற்றுவதற்காக பல்வேறு முயற்றிசகைளை மேற்கொண்டு வந்திருக்கிறார்கள். 1991ஆம் ஆண்டு ‘ஆகாயக் கடல்வெளிச் சமர்’ என்ற தாக்குதல் முலம் புலிகள் ஆனையிறவை கைப்பற்ற பெரும் தாககுதல் ஒன்றை தொடுத்திருந்த பொழுது அது அவர்களுக்கு மிகுந்த தோல்வியை கொடுத்திருந்தது. அப்பொழுது கிளிநாச்சி முதலிய வன்னி நிலத்தை அச்சுறுத்திய ஆனையிறவிலிருந்த படைகளால் பரந்தன் உமையாள்புரம் போன்ற கிராமங்களில் வாழ்ந்த சனங்கள் 1990ஆம் ஆண்டில் இடம்பெயர்ந்து அகதிகளாகினார்கள்.

ஆனையிறவு மக்களை வாழ வைக்கிற உப்பு வளம் மிகுந்த பகுதி. வன்னி நிலத்தையும் யாழ்ப்பாண குடா நாட்டையும் ஒடுக்கமான கடற்பகுதியால் இணைக்கிறது. ஈழப்போரட்டத்தில் ஒரு தடைக் கல்லாகவும் அச்சுறுத்தலாகவும் ஆனையிறவு படை முகாம் இருந்தது. நிறையப் போராளிகளையும் அந்தப் படைமுகாம் தின்றிருந்தது. கிளிநொச்சி கைப்ற்றப்பட்ட பின்னர் 2001ஆம் ஆண்டு மார்ச்ச மாதம் 26ஆம் திகதி தமிழீழ விடுதலைப்புலிகள் ஆனையிறவு படைமுகாம் மீது தாக்குதலை தொடுத்திருந்தனர். அந்தத் தாக்குதலுக்கு ‘ஓயாத அலைகள் மூன்று’ எனப் பெயரிடப்பட்டிருந்தது. இந்த தாக்குதலுக்காக 1200 வரையிலன போராளிகள் குடாரப்பு பகுதியில் தரையிறங்கினார்கள். கடலில் இராணுவத்தினரின் கடுமையான இடை மறிப்புத் தாக்குதல்களுக்கு முகம் கொடுத்து அவற்றை முறியடித்துக்கொண்டு பேராளிகள் தரையிறக்கப்பட்டார்கள். பத்தாயிரத்திற்கும் அதிகமான படையினரால் ஆனையிறவுப்; பகுதி பாதுகாக்கப்பட்டது அல்லது படையினர் அங்கு தங்கியிருந்தார்கள். நெருங்க முடியாததும் அசைக்க முடியாததுமான இந்தக் கோட்டையை விடுதலைப் புலிகள் வலுவான திட்டங்களை வகுத்து அசைக்க வைத்தார்கள்.

குடாரப்பு தரையிறக்கத்திற்காக வந்து கொண்டிருந்த விடுதலைப் புலிகளை இடைமறித்து 16டோறாப் பீரங்கிப் படகுகளில் வந்த இலங்கை கடற்படையினர் தாக்குதலை நடத்தியபொழுது கடற்புலிகள் கடுமையான எதிர் தாக்குதலை நடத்தி ஆபத்தை நீக்கினார்கள். முதல் கட்டமாக பளை, வெற்றிலைக் கேணி, தாளையடி, உடுத்துறை, வத்திராயன், தளையடி, மருதங்கேனி போன்ற பகுதிகளை புலிகள் கைபற்றினார்கள். அங்கிருந்த ஆட்லறித் தளங்களை அழித்து ஆனையிறவு படையினரை பொறிக்குள் கொண்டு வநதார்கள். இராணுவத்தினரால் சூழப்பட்ட பகுதிகளுக்குள் நின்று கொண்டிருந்த விடுதலைப் புலிகளுக்கு தரை வழிப் பாதை ஒன்று தேவைப்பட்டது. உடுத்துறை வழியான தரைவழி;ப்பாதை ஒன்று இரண்டு நாட்களில் விடுதலைப் புலிகளால் திறக்கப்படட்து. 34 நாட்கள் அந்தப் பகுதியில் தரித்திருந்து சண்டையிட்ட புலிகள் 34ஆவது நாள் ஆனையிறவை முற்றுகையிட்டார்கள். போராளிகளது கடுமையான தாக்குதல்கள், அர்பணிப்பகள், தளபதிகளின் வழிநடத்தல்கள் என்பனவற்றால் ஆனைறியவு போராளிகளால் கைப்பற்றப்பட்டது.

குடாரப்பு தரையிறக்கம் என்ற ஆச்சரியப்பட வைக்கிற தரையிறக்கத்தில் போராளிகளை வழி நடத்தி போர் புரிந்தவர் தளபதி பால்ராஜ். தளபதி துர்க்கா, தளபதி விதுசா, தளபதி ராஜசிங்கன் போன்றவர்கள் தரையிறக்க சமரில் தாக்குதல்களில் ஈடுபட்டார்கள். இந்தச் சமர்களிலும் பெண் போராளிகள் கடுமையான உழைத்திருந்தார்கள். போராளிகள் தமது பொறிக்குள் சிக்குகிறார்கள் அவர்களை முழுமையாக அழித்துவிடலாம சிறைப்பிடிக்கலாம் என்று காத்திருந்த இராணுவம் இறுதியில் போராளிகளின் பொறிக்குள் சிக்கியது. இராணுவத்தை போராளிகள் சுற்றி வளைத்தார்கள். வியக்க வைக்கிற விதமான தாக்குதல்களினால் இரணுவம் நிலைகுலைந்து ஓடத் தொடங்கின. இராணுவம் கிளிhலி வழியாக தப்பிச் சென்றது. இந்த தாக்குதல் பத்தாயிரம் இராணுவத்தின் உயிரையும் 1200 போராளிகளது உயிரையும் தின்றது. ஆனையிறவை கைப்பற்றுவதற்கான வேவுகளின் பொழுது போராளிகள் மிகுந்த கஷ்டங்களை அனுபவத்திருக்கிறார்கள். அந்த வேவுப் போராளிகளது சாதுரியமான செயற்பாடுகள் மிகவும் துல்லியமான சமரை நடத்த உதவியிருந்து. தமிழ் மக்களால் ஆனையிறவு கைப்பற்றப்பட்டதை முன்னிட்டு வெற்றி கொண்டாடப்பட்டது. வன்னி மக்களுக்கு இருந்த ஒரு பக்க அச்சுறுத்தல் நீங்கியது. கிளிநொச்சி பரந்தன் உமையாள்புரம் கண்டவளை மக்கள் அச்சமின்றி மீள் தங்கள் ஊர்களுக்கு திரும்புகிற நாட்கள் வந்தன.

ஆனையிறவு வெற்றி கொள்ளப்பட்ட பிறகு கிளிநொச்சிக்கான நிருவாக அலுவலகங்கள் திரும்பின. கிளிநொச்சி கைப்பற்றியவுடன் நான் முதலில் படித்துக்கொண்டிருந்த உருத்திரபுரம் மகாவித்தியாலயம் தனது சொந்த இடத்திற்கு திரும்பியதும் அக்கராயனில் இயங்கிக்கொண்டிருந்த கிளிநொச்சி மத்திய கல்லூரி என்ற எனது பாடசாலையில் சேர்ந்து கொண்டேன். பிறகு கிளிநொச்சி மத்திய கல்லூரியும் கிளிநொச்சிக்கு திரும்பியது. மணியங்குளத்திலிருந்து சுமாராக பதின்மூன்று கிலோ மீற்றர் தூரத்தில் உள்ள கிளிநொச்சியின் மையத்தில் உள்ள எனது பாடசாலைககு சைக்கிளில் வந்து படித்து திரும்பிக்கொண்டிருந்தோம். எங்கள் பாடசாலை பெரும் அழிவுகளை சந்தித்திருந்தது. எங்கள் பாடசாலையில் அமைந்திருந்த மிகவும் பெரிய மேல்மாடிக்கட்டிடம் யுத்த அழிவின் சின்னம் என்பதை பிரதிபலித்துக்கொண்டிருந்தது. பாடசாலைக்கு அழகு சேர்த்த அந்தக்க கட்டிடத்துடன் பிரதான மண்டபம் என்ற மிகப்பெரிய மண்டபமும் சிதைந்து போயிருந்தது. ஓலைகளால் வேயப்பட்ட திறந்த வெளி வகுப்பறைகளில் எங்கள் வகுப்புகள் நடந்து கொண்டிருந்தன. எப்படியிருந்தாலும் நாங்கள் எங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்புகிறோம் எங்கள் பாடசாலை திரும்பிவிட்டது என்பன எங்களை எல்லையில்லாத மகிழ்ச்சிப்படுத்தியது.

கண்ணிவெடிகள் சனங்களை தின்பதற்கு பதுங்கியிருக்கும் என்பதனால் மீள் குடியியேற்றம் கண்ணிவெடிகளை கட்டம் கட்டமாக அகற்றப்பட்டே தொடர்ந்து கொண்டிருந்தது. இந்த மீள் குடியேற்றத்தின பொழுது புதைக்கப்பட்டிருந்த கண்ணிவெடிகளால் நிறையப் பேர் உயிரிழந்திருக்கிறார்கள். அத்துடன் கால்களையும் இழந்திருக்கிறார்கள். கால்நடைகளும் இழப்புக்களை சந்தித்தன. கிளிநொச்சி கைப்ற்றப்பட்டு இரண்டு வருடங்களின் பின்னர் ஆனையிறவு கைப்பற்றப்பட்டதால் கிளிநொச்சியில் கண்ணிவெடிகள் கண்டு பிடிக்க முடியாதபடியும் புதைந்து கிடைந்தன.

ஒரு நாள் பாடசாலை முடிந்ததும் எனது வகுப்பு மாணவர்கள் எல்லோரும் கைபற்றப்பட்ட ஆனையிறவை பார்க்கச் சென்றிருந்தோம். ஆனையிறவு எவ்வளவு பெரிய இராணுவக் கோட்டையாக இருந்தது என்பதை அப்பொழுது பார்க்கும் பொழுதுதான் புரிந்தது. எங்கும் காவலரண்களும் கட்டிடங்களும் இராணுவத்தினரின் வாடி வீடுகளும் அறைகளும் இருந்தன. பெரிய முன்னணிக் காவலரண்களும் அதன் பின் பதுங்கியிருக்கும் வரிசையான பதுங்கு வழிகளும் கண்காணிப்பு கோபுரங்களுமாக எல்லாம் சிதைந்து கிடந்தன. முழு வசிதிகளுடன் அவர்கள் அதற்குள் இருந்திருக்கிறார்கள். போராளிகள் அங்கிருந்த இராணுவத்தின் கட்டுமானங்களை அழித்து ஆனையிறவில் படையினர் மீண்டும் நிலை கொள்ள முடியாத சூழலுக்கு ஏற்ப ஆக்கி;ககொண்டிருந்தார்க்ள. அதேநேரம் சாவகச்சேரி, கைதடி, அரியாலை முதலிய பகுதிகளை கைப்பற்றிக்கொண்டு யாழ் நகரத்திற்கு மூன்று மையில் தூரத்தில் நின்று கொண்டிருந்தார்கள்.

நான் ஆனையிறவில் நினறு கொண்டிருந்த பொழுது கீபிர் விமானங்கள் பெரும் அச்சுறுத்தலுடன் பறந்து குண்டுகளை விசிக்கொண்டிருந்தன. பளை, முகமாலை முதலிய பகுதிகளில் விமானத் தாக்குதல்கள் நடைபெற்றன. யாழ் நகரம் விடுதலைப் புலிகள் வசம் வரப்போகிறது என்று சனங்கள் எதிர்பார்த்திருந்தார்கள். இதற்காக விடுதலைப்புலிகள் நடத்திய சமர்களுக்கு எதிராகவே இராணுவம் மிகக் கடுமையான விமானத்தாக்குதல்களை நடத்திக்கொண்டிருந்தது. யாழ் நகரத்தை நெருங்கும் புலிகளின் தாக்குதல்களிலிருந்து இழப்புகள் அதிகரித்ததினால் அவர்கள் பின்வாங்கிக்கொண்டார்கள்;.

இராணுவத்தினர் புலிகளிடம் இழந்த ஆனையிறவை கைப்பற்றுவதற்கு ‘ஹீனி கல’ என்ற ‘தீச்சுவாலை’ என்ற அர்த்தம் கொண்ட இராணுவ நடவடிக்கையை மேற்கொண்டனர். இராணுவத்திற்கும் தமீழ விடுதலைப் புலிகளுக்கும் கடுமையான உயிரிழப்புக்களை ஏற்படுத்திய இந்த இராணுவ நநடவடிக்கையின் பொழுது இலங்கை இராணுவம் மிகவும் கடுமையான முனைப்புக்களை மேற்கொண்டது. ஆனையிறவுத் தோல்வியால் தெற்கில் ஏற்பட்ட அரசியல் கொந்தளிப்பை சமாளிப்பதற்காக ஆனையிறவை மீளக் கைப்பற்ற அரசாங்கத்தின் படைகள் கடுமையான முயற்சியை மேற்கொண்டன. விமானத்தாக்குதல்கள் ஆட்லறித் தாககுதல்கள் என்று யுத்த களம் தீப்பற்றிக் கொண்டிருந்தது. புலிகள் இரண்டு கிலோமீற்றார்கள் பின்வாங்கிய பொழுதும் உடனேயே அந்தப் பகுதிகளை கைப்பற்றினார்கள். சம நேரத்தில் ஒரு தலைப்பட்ச யுத்த நிறுத்தத்திற்கு தயாராக உள்ளதாக அறிவித்தார்கள். தீச்சுவாலை இராணுவ நடவடிக்கை மூன்று நாட்களின் பின்னர் கைவிடப்படுவதாக அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டது.

இதன் பிறகு கறுப்பு ஜீலை 24ஆம் திகதி 2001ஆம் ஆண்டு கட்டுநாயக்கா விமானத்தளம மீது தமிழீழ விடுதலைப்புலிகள் கரும்புலித் தாக்குதலை நடத்தியிருந்தார்கள். விமானங்கள் எவ்வளவு பயங்கரமானவை என்பதை ஈழத்தின் போர் உக்கிரமாகிய காலத்திலிருந்து பார்த்து வந்திருக்கிறோம். சி;ன்ன இரைசசலுக்கும் பயந்து விழ வைத்து எல்லா நாட்களையும் நேரங்களையும் பதற்றததுக்குள்ளாக்கி விடுகின்றன விமானங்கள். குழந்தைகள் வானத்திற்கு அஞ்சியிருக்கவும் பதுங்குகுழிகளுக்குள் இருளான காலத்தை கழிக்கவும் விமானங்கள் நிர்பந்திக்கன்றன. எப்பொழுதும் உயிரை குடித்து விட்டு வீடுகளையும் கிராமங்களையும் நகரங்களையும் அழித்துவிட்டு திரும்பிச் சென்று கொண்டிருப்பவை. கட்டுநாயக்கா விமானத்தளம் தாக்கப்பட்டது என்ற செய்தி ஈழ மக்களை மகிழ்ச்சிப்படுத்தியது. உலக தமிழ்மக்களை வியக்க வைத்தது. உயிர் குடிக்கிற வல்லூறுகளாக விமானங்களை பார்த்த மக்கள் அது கூட்டுடன் அழிந்தது என்று மகிழ்ந்தார்கள்.

பதினான்கு கரும்புலிகள் தமது உயிரை தியாகம் செய்து நடத்தப்பட்ட இந்த தாக்குதல்களினால் இலங்கை அரசிற்கு மிகப் பெரிய அழிவு ஏற்பட்டது. பன்னிரண்டு விமானங்களும் ஆறு ரெலிகப்டர்களும் அழிக்கப்படன. மேலும் சில விமானங்களும் ரெலிகப்படர்களும் சேதப்பட்டன. ஓட்டுமொத்தமாக 375 அமரிக்க டொலர்கள் இழப்பு அரசாஙகத்திற்கு ஏற்பட்டது. ஆனால் எப்படியும் அதே விமானங்களை இறக்குமதி செய்தும் விமானத்தளத்தை புனரமைப்பு செய்யவும் அரசாங்கம் தீவிரமாக செயற்பட்டது. வெளிநாடுகளின் உதவிகளுடன் கட்டுநாயக்கா விமான றிலையம் பலம் பொருந்திய பழைய நிலைக்கு திரும்பியது.

ஆனால் புலிகள் தொடுத்த தாக்குதல்கள் எல்லாம் அரசாங்கத்தையும் இராணுவத்தினரையும் களத்தில் அடுத்த கட்ட இராணுவ நகர்வுக்கு செல்ல முடியதா நிலைக்கு கொண்டு சென்றது. முகமாலை கள எல்லைகளாக இருந்தன. ஆனால் அடிக்கடி அங்கு சமர்கள் முண்டபடியிருந்தன. நாளுக்கு நாள் பேராளிகள் வீர மரணடடைந்து கொண்டிருந்தார்கள். யுத்தம் மக்களிடமிருந்து உயிர்களை தின்று கொண்டிருந்தது. மக்களும் நேர்மையான ஒரு சமாதானத்தைதான் அப்பொழுதும் விரும்பினார்கள். யுத்த அழிவுகளிலிருந்து மீளவும் களங்களில் பலியாகிக்கொண்டிருக்கிற உயிரழிவை தடுக்கவும் உன்மையான சமாதானமே தேவைப்பட்டது. விடுதலைப் புலிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தைக்கு அழைத்துக்கொண்டிருந்தார்கள்.

நான் சாதாரண தரப்பரீட்சை எழுதி முடித்து விட்டு அதில் போதிய பெறுபேறுகள் கிடைக்காததினால் உயர்தர படிப்பிற்கு செல்ல முடியாதிருந்தேன். நாங்கள் அப்பொழுதும் மணியங்குளத்தில்தான் இருந்தோம். முன்னாள் போராளிகளும் களத்திற்கு பணியாற்ற அழைக்கப்பட்டாகள். அவர்களில் திருமணமாகி குழந்தை உள்ளவர்களும் களங்களுக்கு சென்றர்கள். எங்கள் குடியிருப்பில் எங்கள் வீட்டிற்கு முன் ஆனையிறவுக்கு முன்பாக உள்ள உமையாள்புரத்திலிருந்து இடம்பெயர்ந்து வந்திருந்த ஒரு வீட்டில் திருகோணமலையைச் சேர்ந்த முன்னாள் போராளி துளசி என்பவர் திருமணம் செய்திருந்தார். அவர் களத்திற்கு சென்ற பொழுது எதிர்பாராத சமரில் வீரமரணம் அடைந்துவிட்டார். அவருக்கு குழந்தை பிறந்து இரண்டு மாதங்களாகியிருந்தன. என்னுடன் மிக நெருங்கிப் பழகிய அவரின் மரணம் மிகுந்த பாதிப்பை எனக்கு ஏற்படுத்தியிருந்தது.

அண்ணாவுக்கு ஒரு குழந்தை பிறந்திருந்தது. அண்ணாவையும் களப்பணிக்கு விடுதலைப் புலிகள் அழைத்திருந்தார்கள். அண்ணா மிகுந்த விருப்பத்துடன் சம்மதித்தான். அம்மாவும் அண்ணாவின் மனைவியும் அண்ணாவை கெஞ்சித் தடுத்தார்கள். இயக்கப் பொறுபப்hளர்களிடமும் அம்மா அண்ணாவை அழைத்துச் செல்ல வேண்டாம் என்று கேட்டார். அண்ணா களத்திற்கு செல்ல தயாராக இருந்ததினால் எங்களால் எவ்வளவோ முயன்றும் அண்ணாவை தடுக்க முடியவில்லை. எங்களிடம் சொல்லாமல் அண்ணா களத்திற்கு சென்றிருந்தான். நாங்கள் மிகுந்த பதற்றத்துடன் இருந்தோம். பதினைந்து நாட்களின் பின்னர் அண்ணா வீட்டுக்கு வந்தான். அவனது குழந்தையை தூக்கி வைத்துக்கொண்டு இருந்தான்.

மீண்டும் அண்ணா களத்திற்கு செல்லாத வகையில் அம்மா இயக்க பொறுப்பாளர்களுடன் பேசினார். அவனின் குழந்தையையும் மனைவியையும் காட்டி அவனை களத்திற்கு அழைத்து செல்லாதீர்கள் என்று அம்மா சொன்னார். அண்ணா மீண்டும் எங்களை மீறி களத்திற்கு செல்ல முயன்றுகொண்டிருந்தான். அவனுக்கு பிடித்த உணவுகளை எல்லாம் அம்மா செய்து கொடுத்துக்கொண்டிருந்தார். நான் அண்ணாவுடன் இரவு முழுவதும் சண்டை பிடித்துக்கொண்டு கதைக்கவில்லை. அண்ணாவிடம் போக வேண்டாம் என்று கெஞ்சினேன். அவனது முடிவால் அவனுடன் கதைக்க என்னால் முடியவில்லை. காலையும் என்னிடம் வந்து அண்ணா கதைக்கும் பொழுதெல்லாம் நான் அவனுடன் பேசவில்லை. அம்மாவிடம் தன்னை தடுத்து மனம் நொந்தபடி அனுப்ப வேண்டாம் எனக்கூறிவிட்டான். அதனால் தடுத்துக்கொண்டிருந்த அம்மாவை பேசாமலிருக்க செய்திருந்தான்.

அண்ணாவை பேருந்தில் ஏற்றி விடுவதற்ககாக என்னை சைக்கிளில் ஏற்றிக்கொண்டு சென்றான். அவன் என்னை திரும்ப படிக்கவும் பரீட்சைக்கு விண்ணப்பிக்கும்படியும் சொல்லிக்கொண்டு வந்தான். தன்னுடன் கதைக்கும்படி கேட்டுக்கொண்டிருந்தான். நான் கதைக்காமல் இருந்தால் அண்ணா செல்ல மாட்டன் என்ற நம்பிக்கை எனக்கு அவன் பேருந்தில் ஏறி மறையும் வரை இருந்தது. பேருந்தில் ஏறும் பொழுது அம்மாவிடம் கொடுக்கச் சொல்லி 50 ரூபா பணத்தை எனது பொக்கற்றில் வைத்தான். அண்ணா போக மாட்டன் என்று இருந்த என்னனை விட்டு அவன் போயக்கொண்டிருந்தான். இடையிலாவது திரும்புவான் என்று மனம்; சொல்லிக் கொண்டிருந்தது. அவன் என்னை பேரூந்து நிலையத்தில் விட்டு சென்று விட்டான். கதைக்காமல் அனுப்பியது மனதை மிகுந்த துன்பப்டுத்தியது. முதல் முறை மாதிரி இந்த முறையும் அவன் நலமாக திரும்பிவிடுவான் என்ற நம்பிக்கை இருந்தது. மனதில் தீ எறிந்துகொண்டிருந்தது. மிகுந்த பற்றமாக ஒவ்வொரு நிமிடமும் கழிந்து கொண்டிருந்து. அவனது பிரிவு தாங்க முடியாமல் சிறிய வயது முதல் எவ்வளவு துடித்திருப்பேன். எப்பொழுதும் எங்கள் மனத்துயரை புரிந்து கொள்ளமலே அண்ணா இப்படி செய்து கொண்டிருந்தான். அன்று ஒரு வியாழக்கிழமைதான் அண்ணா எங்களை இப்படி பதற வைத்து விட்டு களத்திற்கு சென்றிருந்தான்.

அம்மா கோணவிலுக்கு பவா அன்றியின் வீட்டுக்குச் சென்றிருந்தார். பவா அன்றியின் மகள் என்னுடன் படித்த துஸியந்தி அப்போது நடைபெற்ற சமரில் வீர மரணம் அடைந்திருந்தாள். அவளது வீரமரண அஞ்சலிக்காக சென்று திரும்பிய சில நாட்களில் எட்டாவது நாள் செய்யும் மரணச் செலவு என்ற கிருத்திய நிகழ்விற்கு அம்மா சென்றிருந்தார். சாதாரண தரம் படிக்கும் பொழுது துஸியந்தியின் பாடசாலையில் போராளிகள் வந்து பிரச்சாரம் செய்த பொழுது துஸியந்தி போராட்டத்தில் இணைந்திருந்தாள். மிகவும் துணிச்சல் மிகுந்த பெண்ணான துஸியந்தி, ஈழ விடுதலைப் போராட்டத்தில் மிகுந்த பற்றுக்கொண்டவள். மாவீரர்களின் கல்லறைகளை வணங்குபவள். மாவீரர் துயிலும் இல்லங்களுக்கு எப்பொழுதும் சென்று கொண்டிருப்பவள். எனக்கு மிகவும் நெருக்கமான அந்தத் தோழி விடுதலைப்போராட்டத்தில் இணைந்து வீரமரணம் அடைந்தது என்னை மிகவும் துயரப்படுத்திய மற்றொரு வீரமரணமாக இருந்தது. அவள் துப்புரவாக்கி அழகுபடுத்தி வணங்கிய துயிலும் இல்லத்திலேயே அவளது வெற்றுடல் விதைக்கப்பட்டிருந்தது. ஆனையிறவு முகாம் தாக்குதல்கள் உட்பட பல தாக்குதல்களினால் அதிக எண்ணிக்கையிலான வீரமரணங்கள் நிகழ்ந்து விட்டன. நகரங்களையும் கிராமங்களையும் வெளிகளையும் கைபற்றுவதற்காக உயிர் வலிக்கிற மரணங்களை போராளிகள் எதிர்கொண்டார்கள். அப்படியான உன்னதமான மரணங்களினால்தான் வன்னி நிலத்தை மக்கள் மீள பெற்றுக்கொள்ள முடிந்தது.

அன்று ஞாயிற்றுக் கிழமை எங்கள் வீட்டை இரண்டு போராளிகள் வந்து தேடிக் கொண்டிருந்தார்கள். போராளிகள் வீடுகளை விசாரித்துக் கொண்டிருந்தால் அது பெரிய பதற்றத்திக்கு உள்ளாக்கி விடும். நான் மிகவும் பயந்தபடி என்ன பிரச்சினை என்று போராளிகளை கேட்ட பொழுது அண்ணா சிறிய காயத்திற்கு உள்ளாகியிருப்பதால் அவன் என்னை பார்க்க ஆசைப்படுவதாக மெல்ல மெல்ல கூறினார்கள். நான் பதற்றத்தின் உச்சத்திற்கு சென்று விட்டேன். அவர்கள் என்னை ஏற்றிக்கொண்டு சென்றார்கள். கிளிநொச்சி முறிப்பு என்ற இடத்தில் இருந்த விடுதலைப்புலிகளின் மருத்துவ முகாமில் அண்ணா அனுமதிக்கப்ட்டிருந்தான்.

மோடட்hர் சைக்கிளில் அவர்கள் என்னை ஏற்றிக்கொண்டு சென்றார்கள். மோட்டார் சைக்கிள் வேகமாக செல்ல மறுப்பதைப் போலிருந்தது. அது நகர நகர எனக்குள் அண்ணாவின் நினைவுகள் வந்து மோதிக்கொண்டிருந்தன. அழுகை பீறிட்டுக்கொண்டு வந்தது. அண்ணா என்னுடன் கதைக்கவேண்டும் என்றும் என்னை பார்க்க வேண்டும் எனறும் கூறியபடியிருந்ததாக அந்தப் போராளிகள் எனக்கு கூறிக்கொண்டு வந்தார்கள். என்னால் அவர்களுடன் பேச முடியாதிருந்தது. வார்த்தைகள் வர மறுத்தன. என்னை பயப்பிட வேண்டாம் என்று அந்தப் போராளிகள் ஆறுதல் படுத்திக்கொண்டு வந்தார்கள். எப்படி பயப்பிடாமலும் பதற்றம் கொள்ளாமலும் இருக்க முடியும். அந்த மருத்துவ முகாம் வந்துவிட்டது. என்னை ஏற்றி வந்த போராளிகளும் பதற்றத்துடன் சைக்கிளை நிறுத்திய பொழுது சிறிய விபத்து நிகழ்ந்ததால் எனது கையிலும் காலிலும் சிறிய காயம் ஏற்பட்டுவிட்டது.

இவர்தான் பிரசன்னாவின் தம்பி என்று கூறிக்கொண்டு என்னை அழைத்துச் சென்றார்கள். என்னை அறிமுகப்படுத்தியவுடனேயே அங்கு நின்ற போராளியின் முகத்தில் பதற்றம் அதிரித்தது. என்னை வரவேற்பறையில் இருத்திவிட்டு உள்ளே சென்றவர்கள் திரும்பி வருவதற்கு நீண்ட நேரமாகியது. நாங்கள் கிளிநொச்சியிலிருந்து இடம்பெயர்ந்து வந்து முதன் முதலில் தஞ்சமடைந்திருந்த முறிப்பு பகுதியில்தான் அந்த போராளிகள் மருத்துவ முகாம் அமைந்திருந்தது. அண்ணாவும் நானும் தேங்காய் வேண்டுவதற்காகவும் பால் வேண்டுவதற்காகவும் நடந்து திரிந்த தெருவிலேயே அந்த முகாம் அமைந்திருந்து. அண்ணா பற்றிய எல்லா நினைவுகளும் வந்து மனதில் குவிந்து கொண்டிருந்தன.

உயிர்மை டிசம்பர் 2009

2 comments:

  1. தங்களின் உயிர்மை கட்டுரைகளை வாசித்து வருகிறேன். நிலம் சார்ந்த பதிவு ஒரு மறுக்க முடியாத வரலாறு. தொடரட்டும் தோழரே.

    ReplyDelete
  2. அன்பின் கே.பாலமுருகன்

    உங்களது வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

    ReplyDelete